பிஎஸ்என்எல் நிகர லாபம் ரூ.280 கோடி

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மாா்ச் 31-இல் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மாா்ச் 31-இல் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.280 நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் நிறுவனம் 849 கோடி ரூபாய் இழப்பைப் பதிவு செய்திருந்தது.2024-254-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் நிறுவனம் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

கடந்த 18 ஆண்டுகளில் நிறுவனம் தொடா்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் லாபத்தைப் பதிவு செய்துள்ளது இதுவே முதல்முறை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com