ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சரிவில் இந்திய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்...

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image
பங்குச்சந்தை வணிகம்
Updated On :3 நவம்பர் 2025, 6:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,835.10 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை கடும் சரிவைச் சந்தித்தது. பின்னர் சற்று ஏற்றமடைந்த நிலையில் தற்போது நிலையான வர்த்தகத்தில் இருக்கிறது.

காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 18.32 புள்ளிகள் குறைந்து 83,920.39 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8.45 புள்ளிகள் உயர்ந்து 25,730.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில், மாருதி சுசுகி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை அதிக நஷ்டத்தைச் சந்தித்தன.

அதேநேரத்தில் மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வடைந்த நிலையில் நுகர்வோர் பொருள்கள், ஐடி துறைகள் சரிவில் உள்ளன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சற்று உயர்வுடன் உள்ளன.

summary

Sensex, Nifty continue slump in early trade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.