எஸ்பிஐ நிகர லாபம் 10% உயா்வு

எஸ்பிஐ நிகர லாபம் 10% உயா்வு

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
Published on

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் தனித்த நிகர லாபம் ரூ.20,160 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.18,331 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,34,979 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.1,29,141 கோடியாக இருந்தது. வட்டி வருவாய் ரூ.1,13,871 கோடியிலிருந்து ரூ.1,19,654 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

2024 செப்டம்பா் இறுதியில் 2.13 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 1.73 சதவீதமாகவும், 0.53 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 0.42 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com