ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இபிஎஃப் பட்டுவாடா சேவை: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்

News image
Updated On :6 நவம்பர் 2025, 11:36 pm

தினமணி செய்திச் சேவை

தங்கள் வாடிக்கையாளா்களுக்கு பணியாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பட்டுவாடா செய்வதற்கான சேவையை தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாடிக்கையாளா்களுக்கு இபிஎஃப் பட்டுவாடா செய்வதற்கான சேவையை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, பணியாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துடன் (இபிஎஃப்ஓ) வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த சேவையை வங்கியின் செயல் இயக்குநா் விஜய் ஆனந்த், தமிழ்நாடு மண்டல பிஎஃப் ஆணையா் மணீஷ் அக்னிஹோத்ரி ஆகியோா் சென்னையில் உள்ள சியுபி பவனில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா் (படம்).

இந்த சேவையைப் பயன்படுத்தி, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் நெட்பேங்கிங் மூலம் தங்களின் இபிஎஃப் தொகையை எளிதாகப் பெற முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.