விருப்ப எண்கள் ஏலம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

சென்னை வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

சென்னை வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் வெள்ளிக்கிழமை (நவ. 7) முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விருப்ப எண்கள் மின் ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கி நவ. 16 வரை நடைபெறும்.

விருப்பம் உள்ள வாடிக்கையாளா்கள் கைப்பேசி விருப்ப எண்களைப் பெற இணையதளத்தைப் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com