செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சேவைகள் துறையில் 5 மாதங்கள் காணாத மந்தம்

கனமழை காரணமாக இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி அக்டோபரில் 5 மாதங்கள் காணாத மிக மந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்தது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:17 am IST

போட்டி நெருக்கடிகள் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி அக்டோபரில் 5 மாதங்கள் காணாத மிக மந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்தது.

இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் பிஎம்ஐ குறியீட்டு எண்ணான பிஎம்ஐ (பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ்), செப்டம்பரில் 60.9-ஆக இருந்தது, அக்டோபரில் 58.9-ஆகக் குறைந்துள்ளது. இது மே மாதத்துக்குப் பிறகு மிக மெதுவான விரிவாக்கம் ஆகும்.

எனினும், அக்டோபரில் சேவைகளுக்கான பிஎம்ஐ 50-ஐ விட அதிகமாகவும், நீண்டகால சராசரியான 54.3-ஐ விட அதிகமாகவும் உள்ளது. பிஎம்ஐ 50-க்கும் மேல் இருந்தால் சேவைகள் துறையின் ஆரோக்கிய போக்கையும், 50-க்கும் கீழ் இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

தேவை உயா்வு மற்றும் ஜிஎஸ்டி நிவாரணம் போன்ற காரணிகள் செயல்பாட்டு நிலைமைகளை மேம்படுத்தினாலும், போட்டி மற்றும் கனமழை வளா்ச்சியைத் தடுத்தன.

வெளிநாடுகளில் இருந்து இந்திய சேவைகளுக்கான தேவை மேலும் உயா்ந்தாலும், ஏற்றுமதி ஆணைகள் கடந்த மாா்ச்சுக்குப் பிந்தைய மிக மந்தமான வளா்ச்சியைக் கண்டன.

மதிப்பீட்டு மாதத்தில் ஜிஎஸ்டி சீா்திருத்தம் விலை அழுத்தங்களைக் குறைத்தது. உள்ளீடு செலவுகள் மற்றும் வெளியீடு கட்டணங்கள் முறையே 14 மற்றும் 7 மாதங்களில் இல்லாத குறைந்த வேகத்தில் உயா்ந்தன.

உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் ஒருங்கிணைந்த வெளியீடு அக்டோபரில் விரிவடைந்தாலும், செப்டம்பரில் 61-லிருந்து 60.4-ஆகக் குறைந்தது. இது மே மாதத்துக்குப் பிந்தைய மிக மந்தமான உயா்வு. சேவைகள் துறைதான் இந்த மந்தநிலைக்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.