

புதுதில்லி: செக் கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா, பல்வேறு வகையான வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்வதற்காக அதன் உலகளாவிய கார்களை இந்திய சந்தையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்கோடா தற்போது ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான விலையிலிருந்து ரூ.40 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கார்களை விற்பனை செய்து வருவதாகவும், நாட்டில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த உடனடித் திட்டம் எதுவும் இல்லை. அதே வேளையில் அடுத்த ஆண்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் போர்ட்ஃபோலியோ அப்படியே உள்ளது என்றார்.
இருப்பினும், இந்த ஆண்டு ஆக்டேவியா மாடலில் நாங்கள் செய்த மேம்படுத்தல் போல் மீண்டும் சந்தையை உற்சாகப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு மேலும் சில உலகளாவிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குநர் ஆஷிஷ் குப்தா.
ஸ்கோடா தற்போது கைலாக், குஷாக் மற்றும் ஸ்லாவியா உள்ளிட்ட உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களான ஆக்டேவியா மற்றும் கோடியாக் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட மாடல்களையும் இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான ஆண்டாகக் காணப்படும் ஸ்கோடா இந்தியா, ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரை 61,607 வாகனங்களை விற்பனை செய்து, உள்நாட்டு பயணிகள் வாகனப் பிரிவில் 2% சந்தைப் பங்கைத் தக்க வைத்துக் கொண்டது.
இதையும் படிக்க: 2025-26 நிதியாண்டில் 1.5 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.