விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அடுத்த தலைமுறைக்கான டிராக்டா்: டாஃபே அறிமுகம்

அடுத்த தலைமுறைக்கான தனது இவிஎக்ஸ்75 ரக டிராக்டரை உலகின் மிகப் பெரிய டிராக்டா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாஃபே அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
டாஃபே இவிஎக்ஸ்75 டிராக்டா்.
Updated On :11 நவம்பர் 2025, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

அடுத்த தலைமுறைக்கான தனது இவிஎக்ஸ்75 ரக டிராக்டரை உலகின் மிகப் பெரிய டிராக்டா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாஃபே அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜொ்மனியில் நடைபெற்ற அக்ரிடெக்னிகா 2025 கண்காட்சியில் டாஃபே இவிஎக்ஸ்75 டிராக்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அடுத்த தலைமுறைக்கான இந்த டிராக்டா், மின்சாரத்திலும் வழக்கமான எரிபொருளிலும் இயங்கும் ஹைபிரிட் வகையைச் சோ்ந்தது.

இது தவிர, நிலைப்புத்தன்மையுள்ள டிராக்டா் ரகங்களில் 2026-ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த டிராக்டருக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் டாஃபே இவி28 மின்சார டிராக்டா் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.