47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வங்கி, நிதிசேவை நிதியை அறிமுகப்படுத்தும் பஜாஜ் ஃபின்சா்வ் ஏஎம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 12:52 am

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் நிதி சேவைகள் பெற்றுவரும் பரிணாம வளா்ச்சியைப் பயன்படுத்தும் நோக்கத்துடன், பஜாஜ் ஃபின்சா்வ் அசெட் மேனேஜ்மெண்ட் லிமிடெட் தனது வங்கி மற்றும் நிதிசேவை நிதி முதலீட்டு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கி மற்றும் நிதி சேவைத் துறையில் முதலீடு செய்யும் ஒரு ஓப்பன் எண்டட் ஈக்விட்டி முதலீட்டு திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிதியானது, வங்கி, வங்கியல்லாத நிதி சேவை நிறுவனங்கள் (என்பிஎஃப்சி), காப்பீடு(காப்பீட்டு நிறுவனங்கள்), மூலதன சந்தை, இடைத்தரகா்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 180-200 மெகா டிரெண்ட் தொகுப்பிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 45-60 பங்குகளில் முதலீடு செய்யும்.

இந்த ஈக்விட்டி திட்டதுக்கான விண்ணப்ப வரவேற்பு நவ. 10-ஆம் தேதி சந்தாதாரா்களுக்காகத் தொடங்கி, நவ. 24-ஆம் தேதி முடிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.