திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அடுத்த தலைமுறை டாடா சியரா அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் இன்று அதன் அடுத்த தலைமுறை எஸ்யூவி காரான சியராவை புதிய தொற்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image

புதிய சியரா கார்

Updated On :15 நவம்பர் 2025, 7:27 pm IST

மும்பை: டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவானது இன்று அதன் அடுத்த தலைமுறை எஸ்யூவி காரான சியராவை புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய டாடா சியரா அதன் தனித்துவமான வடிவமைப்பு தக்க வைத்துக் கொண்டுள்ளதாக மும்பையை தளமாகக் கொண்ட ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாடல் காரானது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் உள்ளிட்ட நடுத்தர அளவிலான எஸ்யூவி கார்களுடன் போட்டியிட உள்ளது.

புதிய டாடா சியரா நவம்பர் 25, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.

டாடா மோட்டார்ஸின் துணைத் தலைவரும் உலகளாவிய வடிவமைப்புத் தலைவருமான மார்ட்டின், இந்த வாகனமானது ஒரு வாழும் சின்னம் என்றார்.

டாடா சியரா முதன்முதலில் 1991ல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.