இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

மும்பையில் பிரதான குழாய் சேதமடைந்ததால் இன்று சி.என்.ஜி. விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹாங்கர் கேஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2025, 3:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் பிரதான குழாய் சேதமடைந்ததால் சி.என்.ஜி. விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹாங்கர் கேஸ் இன்று தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்துகள், ஓலா மற்றும் உபர் உள்ளிட்ட சில நிறுவனங்களால் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோரிக்‌ஷாக்கள் மற்றும் டாக்சிகளுக்கும் சி.என்.ஜி. விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் தொடர்வதை உறுதி செய்யும் வகையில், குடியிருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தானே மற்றும் நவி மும்பை முழுவதும் உள்ள சி.என்.ஜி. நிலையங்கள், பொதுப் போக்குவரத்துக்கான பிரத்யேக சி.என்.ஜி. நிலையங்கள் ஆகியவற்றுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் இயங்காமல் போகலாம் என்றும் அதே வேளயில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மாற்று எரிபொருளுக்கு மாறுமாறு மஹாங்கர் கேஸ் அறிவுறுத்தியுள்ளது.

சேதம் சரிசெய்யப்பட்டு விநியோகம் சரியானதுடன் மஹாங்கர் கேஸ் நெட்வொர்க் முழுவதும் எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.