பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புதிய ஓஎஸ் உடன் டிச. 2-ல் அறிமுகமாகிறது விவோ எக்ஸ் 300!

விவோ எக்ஸ் 300 உடன் விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது.

News image

விவோ எக்ஸ் 300 ப்ரோ - படம் / நன்றி - விவோ

Updated On :17 நவம்பர் 2025, 6:01 pm IST

விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போன் டிச. 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ எக்ஸ் 300 உடன் விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது.

புராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு ஆகியவை மேம்பட்ட தரத்தில் இருக்கும் என விவோ குறிப்பிட்டுள்ளது.

விவோ எக்ஸ் 200 வரிசை ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகமான நிலையில், விவோ எக்ஸ் 300 இந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகமாகின்றன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது விவோ எக்ஸ் 300 வரிசையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே சீனாவில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதன்படி, சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ் 300 வரிசை ஸ்மார்ட்போன்களில் உள்ள சிறப்பம்சங்கள் சற்று மேம்படுத்தப்பட்டு இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர் இருக்கும். ஆன்டிராய்டு 16 அடிப்படையாகக் கொண்ட ஓரிஜின் ஓஎஸ் கொண்டிருக்கும். விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனில் 200MP டெலிபோட்டோ சென்சார் இருக்கும்.

மின்னணு சாதனங்களை அதிகம் விரும்புவோர் ஓரிஜின் ஓஎஸ் பயன்பாட்டை அறிந்துகொள்வதற்காகவே எதிர்பார்ப்புடன் உள்ளனர். நவ. 26ஆம் தேதி அறிமுகமாகும் ஐகியூ 15 ஸ்மார்ட்போனிலும் ஓரிஜின் ஓஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்காகவே புதிய இயங்குதளத்தை (ஓஎஸ்) ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.