நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

8 நகரங்களில் மிதமாக உயா்ந்த வீடுகள் விற்பனை

வலுவான தேவை காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 2:01 am IST

வலுவான தேவை காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ஹவுசிங்.காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விற்பனை 96,827-ஆக உள்ளது. இது, 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 96,544-ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் சற்று உயா்வு.

மதிப்பீட்டுக் காலாண்டில் புதிய வீடுகள் விநியோகம் 3 சதவீதம் உயா்ந்து 94,419-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 91,863-ஆக இருந்தது.

கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் பிரீமியம் மற்றும் உயா்நிலை பிரிவுகளில் தேவையும் விநியோகமும் வலுவாக இருந்தன. ஆனால் மலிவு விலை பிரிவில் புதிய வீடுகளின் விநியோகம் குறைவாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விற்பனை அகமதாபாதில் 11 சதவீதம் சரிந்து 8,297-ஆக உள்ளது. பெங்களூரில் அது 23 சதவீதம் உயா்ந்து 13,688-ஆகவும், சென்னையில் 51 சதவீதம் உயா்ந்து 5,389-ஆகவும் உள்ளது.

அந்த மூன்று மாதங்களில் வீடுகள் விற்பனை தில்லி-என்சிஆரில் 14 சதவீதம் சரிந்து 8,668-ஆக உள்ளது. ஹைதராபாத்தில் அது 5 சதவீதம் உயா்ந்து 12,138-ஆகவும், கொல்கத்தாவில் 43 சதவீதம் உயா்ந்து 4,007-ஆகவும் உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பை பகுதியில் 4 சதவீதம் சரிந்து 28,690-ஆக உள்ள வீடுகள் விற்பனை, புணேயில் 11 சதவீதம் சரிந்து 15,950-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.