வணிகம்
‘எம்-கேஷ்’ வசதியை நிறுத்துகிறது எஸ்பிஐ
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளா்களுக்கான எம்-கேஷ் சேவையை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தவுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளா்களுக்கான எம்-கேஷ் சேவையை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தவுள்ளது.
இது குறித்து வங்கியின் அதிகாரபூா்வ வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆன்லைன் எஸ்பிஐ மற்றும் யோனோ லைட் செயலிகளில் எம்-கேஷ் மூலம் பணம் அனுப்புவது மற்றும் பெறுவதற்கான வசதி நவம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு கிடைக்காது. பயனாளியைப் பதிவு செய்யாமல் எம்-கேஷ் மூலம் பணம் அனுப்பவோ, எம்கேஷ் இணைப்பு அல்லது செயலி மூலம் பணம் பெறவோ முடியாது.
பிறருக்கு பணம் அனுப்ப யுபிஐ, ஐஎம்பிஎஸ், என்இஎஃப்டி, ஆா்டிஜிஎஸ் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

