விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘எம்-கேஷ்’ வசதியை நிறுத்துகிறது எஸ்பிஐ

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளா்களுக்கான எம்-கேஷ் சேவையை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தவுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளா்களுக்கான எம்-கேஷ் சேவையை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தவுள்ளது.

இது குறித்து வங்கியின் அதிகாரபூா்வ வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆன்லைன் எஸ்பிஐ மற்றும் யோனோ லைட் செயலிகளில் எம்-கேஷ் மூலம் பணம் அனுப்புவது மற்றும் பெறுவதற்கான வசதி நவம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு கிடைக்காது. பயனாளியைப் பதிவு செய்யாமல் எம்-கேஷ் மூலம் பணம் அனுப்பவோ, எம்கேஷ் இணைப்பு அல்லது செயலி மூலம் பணம் பெறவோ முடியாது.

பிறருக்கு பணம் அனுப்ப யுபிஐ, ஐஎம்பிஎஸ், என்இஎஃப்டி, ஆா்டிஜிஎஸ் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.