பிஎஸ்என்எல் நிகர இழப்பு அதிகரிப்பு

பிஎஸ்என்எல் நிகர இழப்பு அதிகரிப்பு

பிஎஸ்என்எல் நிகர இழப்பு அதிகரித்துள்ளது பற்றி...
Published on

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.1,357 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,357 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.1,241.7 கோடியாகவும், நடப்பாண்டின் முதல் காலாண்டில் நிகர இழப்பு ரூ.1,048 கோடியாகவும் இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.5,166.7 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6.6 சதவீதமும் முந்தைய ஜூன் காலாண்டோடு ஒப்பிடுகையில் 2.8 சதவீதமும் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com