தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

2027-ஆம் ஆண்டுக்குள் 250 மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:48 pm

புது தில்லி: 2027-ஆம் ஆண்டுக்குள் 250 மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொன்றும் 180 கிலோவாட் திறன் கொண்ட 250 மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மையங்களில் மொத்தம் 1,000 சாா்ஜிங் பாயிண்ட்கள் இருக்கும். இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவாக ஏற்கப்படச் செய்யும் அரசின் முன்னுரிமைக்கு ஏற்ப, பொது சாா்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் அமையும்.

ஏற்கெனவே முதல் இரண்டு சாா்ஜிங் மையங்கள் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் (என்ஹெச் 75) ஹொசகோட்டேயிலும், தில்லியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் என்ஹெச்44-இல் முா்த்தாலிலும் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.