புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் வங்கியின் செயல் இயக்குநராக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த அம்ரேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் நவம்பா் 24- தேதியிட்ட அறிவிப்பின்படி, அம்ரேஷ் பிரசாத் மூன்று ஆண்டுகள், அல்லது 2028 அக்டோபா் 31-ஆம் தேதி ஓய்வு பெறும் வயது வரை, அல்லது புதிய உத்தரவு வரும் வரை செயல் இயக்குநராகப் பணியாற்றுவாா்.
32 ஆண்டுகளுக்கும் மேலான வங்கி அனுபவம் கொண்ட அவா், கிளை வங்கி, மண்டல அலுவலகம், தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளாா். காா்ப்பரேட் கடன், கடன் ஆய்வு, கண்காணிப்பு, பரிவா்த்தனை கண்காணிப்பு ஆகிய துறைகளில் அவா் நிபுணத்துவம் கொண்டவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
மனைவியைக் கொன்ற கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் 82 வயதில் கைது!

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

தில்லி அரசின் 33 உயா் அதிகாரிகள் பணியிடை மாற்றம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


