காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு: கிரிசில்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கணிப்பை கிரிசில் 6.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

Published On :

கொல்கத்தா: நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் எதிர்பார்ப்புகளை விட 8% வளர்ச்சி தென்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கணிப்பை கிரிசில் 6.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

2-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2% இருந்தது. இது எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருந்தது என்று கிரிசிலின் தலைமை பொருளாதார நிபுணர் ஜோஷி தெரிவித்தார்.

இருப்பினும், பணவீக்கம் தளர்வால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7% ஆக இருந்தது.

முதல் பாதியில் 8% வளர்ச்சியும், அமெரிக்க வரிகள் அதிகரிப்பின் தாக்கத்தால் இரண்டாம் பாதியில் 6.1% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் தனியார் நுகர்வானது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருப்பதாக தெரிவித்துள்ளது கிரிசில்.

விநியோகப் பக்கத்திலிருந்து, உற்பத்தி மற்றும் சேவைகளில் வளர்ச்சி குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. உணவுப் பணவீக்கம் குறைவாக இருப்பது நாட்டில் மற்ற செலவினங்களைத் தூண்டியதாக தெரிவித்தார்.

அதே வேளையில் இந்த சாதகமான சூழ்நிலைகளால் 3-வது காலாண்டு தொடர்ந்து பயனடையும் என்றார் ஜோஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.