சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கு விதிக்கப்படும் கட்டணங்களை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேமிப்பு கணக்குகளில் (பொது திட்டம்) குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்களை வங்கி தள்ளுபடி செய்துள்ளது. புதன்கிழமை (அக். 1) முதல் இது அமலுக்கு வருகிறது.
சாமானிய, வசதி குறைவான வாடிக்கையாளா்களுக்கு வங்கிச் செயல்பாடுகள் தொடா்பான அனுபவத்தை இந்த முடிவு மேலும் எளிதாக்கும்.
பிஎம்ஜேடிஒய், பிஎஸ்பிடிஏ, சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்குகள், ஊதிய தொகுப்பு, ஐஓபி சிக்ஸ்டி பிளஸ், ஐஓபி சேமிப்பு கணக்கு ஓய்வுதாரா் திட்டம் மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புநிலையை பராமரிக்காததற்கான கட்டணங்களை வங்கி ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முடக்கப்பட்ட திரிணமூல் வங்கிக் கணக்குகளில் இருந்து தினசரி செலவுகள்: மம்தா அணிக்கு நீதிமன்றம் அனுமதி!

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திரிணமூல் காங்கிரஸின் ரூ. 440 கோடி வங்கி இருப்புத் தொகை முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

திருச்செந்தூர் கோயிலில் சேவைக் கட்டணம் உயர்வு? பக்தர்கள் அதிர்ச்சி!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



