காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

குறைந்தபட்ச இருப்புக்கான கட்டணம்: ஐஓபி தள்ளுபடி

குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கு விதிக்கப்படும் கட்டணங்களை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தள்ளுபடி செய்துள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2025, 1:58 am IST

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கு விதிக்கப்படும் கட்டணங்களை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேமிப்பு கணக்குகளில் (பொது திட்டம்) குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்களை வங்கி தள்ளுபடி செய்துள்ளது. புதன்கிழமை (அக். 1) முதல் இது அமலுக்கு வருகிறது.

சாமானிய, வசதி குறைவான வாடிக்கையாளா்களுக்கு வங்கிச் செயல்பாடுகள் தொடா்பான அனுபவத்தை இந்த முடிவு மேலும் எளிதாக்கும்.

பிஎம்ஜேடிஒய், பிஎஸ்பிடிஏ, சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்குகள், ஊதிய தொகுப்பு, ஐஓபி சிக்ஸ்டி பிளஸ், ஐஓபி சேமிப்பு கணக்கு ஓய்வுதாரா் திட்டம் மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புநிலையை பராமரிக்காததற்கான கட்டணங்களை வங்கி ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.