தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யெஸ் வங்கியின் கடனளிப்பு அதிகரிப்பு!

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் கடனளிப்பு செப்டம்பா் காலாண்டில் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
யெஸ் வங்கி
Updated On :4 அக்டோபர் 2025, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் கடனளிப்பு செப்டம்பா் காலாண்டில் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் கடனளிப்பு 6.5 சதவீதம் உயா்ந்து ரூ.2,50,468 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் இது ரூ.2,35,117 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்பு நிதி 7.1 சதவீதம் உயா்ந்து ரூ.2,96,831 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.2,77,214 கோடியாக இருந்தது.

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் கடனளிப்பு 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

அப்போது அது ரூ.2,41,024 கோடியாக இருந்தது. அதே போல், ஜூன் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.2,75,843 கோடி வைப்பு நிதியுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள வைப்பு நிதி 7.6 சதவீதம் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.