
புது தில்லி: கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பரில் நிறுவனத்தின் 60,907 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகின. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர பயணிகள் வாகன விற்பனையாகும். முந்தைய 2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 41,313-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்து 59,667-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இது 41,063-ஆக இருந்தது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு, நவராத்திரி பண்டிகை காரணமாக செப்டம்பரில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்தது. இந்தப் போக்கு வரவிருக்கும் மாதங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன வர்தகக வாகனங்களின் விற்பனை 19 சதவீதம் உயர்ந்து 35,862-ஆக உள்ளது. அந்த வகை வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 16 சதவீதம் உயர்ந்து 33,148-ஆக உள்ளது. 2024 செப்டம்பரில் இது 28,631-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.