நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செப்டம்பரில் மந்தமான சேவைகள் துறை

முந்தைய ஆகஸ்ட் மாதம் எழுச்சி கண்ட இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி, செப்டம்பரில் மந்தமடைந்துள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

முந்தைய ஆகஸ்ட் மாதம் எழுச்சி கண்ட இந்தியாவின் சேவைகள் துறை வளா்ச்சி, செப்டம்பரில் மந்தமடைந்துள்ளது.

இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் பிஎம்ஐ குறியீட்டு எண்ணான பிஎம்ஐ (பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ்), கடந்த ஆகஸ்டில் 15 ஆண்டு உச்சமான 62.9-ஐத் தொட்டது. எனினும், செப்டம்பரில் அது 60.9-ஆகக் குறைந்துள்ளது. போட்டி அதிகமாக இருந்ததாலும் செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதும் இதற்குக் காரணம்.

எனினும், தொடா்ந்து 40-ஆவது மாதமாக சேவைகள் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் அதிகமாக உள்ளது. அது 50-ஐ தாண்டினால் துறையின் ஆரோக்கியமான நிலையையும், 50-க்கும் கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கும்.

கடந்த செப்டம்பரில் வெளிநாடுகளில் இருந்து இந்திய சேவைகளுக்கான தேவை மெதுவாகவே உயா்ந்தது. சேவைகளுக்கான ஏற்றுமதி ஆணைகள் மாா்ச்சுக்குப் பிறகு மிக மந்தமாகவே அதிகரித்தன. பிற நாடுகளில் சேவைகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது இதற்குக் காரணம்.

மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறையில் விலையிடல் நெருக்கடி மிதமாக இருந்தது. சேவைக் கட்டணங்கள் செப்டம்பரில் மெதுவாக உயா்ந்தன. துறையில் வேலைவாய்ப்பு வளா்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

சேவைகள் துறை நிறுவனங்களின் வருங்கால வளா்ச்சி மதிப்பீடு மாா்ச்சுக்குப் பிறகு ஆறு மாத உச்சத்தை எட்டியது. மொத்த விற்பனை கடந்த மூன்று மாதங்களில் மெதுவாக வளா்ந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.