மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆடம்பர பொருள்களா? முதலீடுகளா? எவை நற்பயன் தரும்?

ஆடம்பரமான பொருள்களுக்கு செலவழிப்பதைக் காட்டிலும், முதலீடுகள் நற்பயனைத் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தல்

News image
Updated On :9 அக்டோபர் 2025, 7:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆடம்பரமான பொருள்களுக்கு செலவழிப்பதைக் காட்டிலும், முதலீடுகள் நற்பயனைத் தரும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சமீபகாலமாக புதுப்புது மொபைல் போன்களை வாங்குவதில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், ஐபோன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

ஐபோன் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மாடல் ஐபோனையும் தான் தவறாமல் வாங்குவதாக பயனர் ஒருவர் பெருமிதமாகக் கூறுகிறார். மொபைல் மட்டுமின்றி, டிரெண்டிங்கில் உள்ள ஆடம்பர பொருள்கள் மீது இளம் தலைமுறையினர் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால், இவ்வாறு ஆடம்பரமான பொருள்களுக்கு செலவழிப்பதைவிட முதலீட்டில் பணத்தை செலவழிப்பது பயனுள்ளதாக இருக்கும் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உதாரணமாக, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மொபைல் போனின் விலை - ரூ. 1.50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அதனை வாங்க விரும்பும் மிடில் கிளாஸ் பிரிவினர், இஎம்ஐ-யில்தான் (EMI) வாங்குவர்.

மாதம் ரூ. 4,200 என்று 36 மாதங்களுக்கு (3 ஆண்டுகள்) அவர் இஎம்ஐ கட்ட வேண்டியிருக்கும். இந்த 3 ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் வாங்கிய மொபைல் போன் மீதான ஈர்ப்பு மங்கிவிடும்.

ஆனால், அதே 36 மாதங்களுக்கு அதே ரூ. 4,200-ஐ எஸ்ஐபி-யில் (SIP) முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ. 29,733 அதிகரிக்கும்.

அதே சமயம், நாம் வாங்கும் மொபைல் போன்ற டெக் பொருள்கள் நாட்கள் செல்லச்செல்ல அதன் மதிப்பை இழக்கும். கேஜட்டுகள் குறுகிய கால திருப்தியை மட்டுமே வழங்கும். ஆனால், முதலீடுகள் நீண்டகால மதிப்பை வழங்குகின்றன.

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

summary

How much can you earn if you invest Rs 1.5L mobile EMIs in a 36-month SIP?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.