தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியாவில் இருந்து 8 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

கடந்த 202425ஆம்ஆம் சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவில் இருந்து 7.75 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

News image
Updated On :13 அக்டோபர் 2025, 6:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: கடந்த 202425ஆம்ஆம் சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவில் இருந்து 7.75 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இது குறித்து அனைத்து இந்திய சர்க்கரை விற்பனையாளர்கள் சங்கம் (ஏஐஎஸ்டிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 அக்டோபரில் தொடங்கி 2025 செப்டம்பரில் நிறைவடைந்த கடந்த சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் நாட்டில் இருந்து 7.75 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

202425ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் 2025 ஜனவரி 20 முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் மொத்தம் 10 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது.

202425ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை ஆலைகள் 7.75 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்தன. இதில், வெள்ளை சர்க்கரை 6.13 லட்சம் டன், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை 1.04 லட்சம் டன், பச்சை சர்க்கரை 33,338 டன் ஆகும். சுமார் 21,000 டன் பச்சை சர்க்கரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள பதப்படுத்தும் ஆலைகளுக்கு வழங்கப்பட்டது. இதுவும் ஒரு மறைமுக ஏற்றுமதியாகக் கருதப்படுகிறது.

மதிப்பீட்டு சந்தைப்படுத்துதல் ஆண்டின் ஒட்டுமொத்த சர்க்கரை ஏற்றுமதியில், அதிகபட்சமாக ஜிபூட்டிக்கு 1.46 லட்சம் டன் அனுப்பப்பட்டது. அடுத்தபடியாக சோமாலியாவுக்கு 1.35 லட்சம் டன், இலங்கைக்கு 1.34 லட்சம் டன், ஆப்கானிஸ்தானுக்கு 75,533 டன் சர்க்கரை அனுப்பப்பட்டது.

202526ஆம் சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவும், வரும் நவம்பர் மாதத்துக்குள் ஏற்றுமதி ஒதுக்கீட்டை அறிவிக்கவும் மத்திய அரசை சங்கம் கோரியுள்ளது.

202425ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் பின்பற்றப்பட்ட ஏற்றுமதி ஒதுக்கீடு மற்றும் ஆலைகளுக்கு இடையேயான பரிமாற்ற கொள்கையை தொடரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.