
புது தில்லி: மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சியளிக்க ரிலையன்ஸ் ஜியோ முன்வந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025ஆம் ஆண்டின் இந்திய மொபைல் காங்கிரஸ் தொடக்க நாளில், தனது ஏஐ அடிப்படை பயிற்சி திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து ஜியோபிசி மூலம் இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். இந்தப் பயிற்சி ஆரம்பக்கட்டத்தில் உள்ளவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேஜைக் கணினிகள் அல்லது மடிக்கணினிகளை இயக்கக்கூடிய யாரும் இந்தப் பயிற்சியைப் பெறமுடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.