கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பணி நீக்கம்! 15% மனிதவள அதிகாரிகளை வெளியேற்றும் அமேசான்!

பணி நீக்கம் நடவடிக்கையில் அமேசான் இறங்கியிருக்கிறது, 15 சதவிகித மனிதவள அதிகாரிகளை வெளியேற்றவிருக்கிறது.

News image

அமேசான்

Updated On :16 அக்டோபர் 2025, 3:47 pm IST

செய்யறிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கைகளை பல்வேறு நிறுவனங்களும் எடுத்து வரும் நிலையில், அமேசான் நிறுவம் 15 சதவிகித மனிதவள அதிகாரிகளை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல, மற்றத் துறைகளிலும் சில பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனத்தில் நடக்கவிருக்கும் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

மக்கள் அனுபவ தொழில்நுட்பக் குழு (பிஎக்ஸ்டி) பணி நீக்க நடவடிக்கையில் கடுமையாக பாதிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும், மூத்த துணைத் தலைவர் பேத் கல்லெட்டி தலைமையில் இந்த பிரிவில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் இவர்களில் பலரும் பணியாளர்களை பணியமர்த்துவது, மனிதவள மேம்பாட்டுத் துறை தொடர்பான பணிகளை மேற்கொள்வது போன்றவற்றை கவனித்து வந்தனர்.

தற்போதைக்கு, எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படவிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.