
புதுதில்லி: ஐடிபிஐ வங்கி தனது 2-வது காலாண்டு நிகர லாபம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து ரூ.3,627 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனத்தின் முதலீடுகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த லாபமும் இதில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எல்ஐசி கட்டுப்பாட்டில் உள்ள வங்கியானது 2024-25 ஆண்டின் 2-வது காலாண்டு காலகட்டத்தில் ரூ.1,836 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்தது.
நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், தனது ஐபிஓவில் சுமார் 11.11% பங்குகளை, அதாவது 2.22 கோடிக்கும் அதிகமான பங்குகளை, ஐடிபிஐ வங்கிக்கு முன்னுரிமை அடிப்படையில், பங்கு ஒன்றுக்கு ரூ.799.87 என்ற வெளியீட்டு விலையில் வழங்கியது. இந்த பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் வங்கிக்கு ரூ.1,698.96 கோடி நிகர லாபத்தை கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.44,490 கோடியாக உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.