
புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆஷியானா லிமிடெட், ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலிருந்து ரூ.350 கோடி வருவாயை எதிர்பார்ப்பதாக இன்று தெரிவித்துள்ளது.
வலுவான வீட்டுவசதி தேவைக்கு மத்தியில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக டோபோவில் 'ஆஷியானா அமயா' என்ற வீட்டுவசதித் திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.
சுமார் 4.64 லட்சம் சதுர அடி விற்பனை செய்யக்கூடிய பரப்பளவில், 3.86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டம், கூட்டு முயற்சி மாதிரியின் கீழ் உருவாக்கப்படும்.
230 வீடுகளைக் கொண்ட இந்த வரவிருக்கும் திட்டம், சுமார் ரூ.350 கோடி விற்பனையை ஈட்டும் என்றும், இந்த திட்டத்தை டிசம்பர் 2029ல் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.