Hyundai Creta
ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவில் ரூ.45,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்

Published on

தென் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டாா், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.45,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹூண்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவில் கூடுதலாக ரூ.45,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த முதலீடு செய்யப்படும்.

உலகளவில் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com