ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

குரல் வழி பதில் சொல்லும் லூனா செய்யறிவு: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் கண்டுபிடிப்பு

வாய்மொழியில் கேள்வி எழுப்பினால் குரல் வழி பதில் சொல்லும் லூனா ஏஐ உருவாக்கம்

News image

செய்யறிவு - படம் | ஏஎன்ஐ

Updated On :30 அக்டோபர் 2025, 5:55 pm IST

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 25 மாணவர், நிறுவனர் ஸ்பார்ஷ் அகர்வால், வாய் மொழியாக கேள்வி எழுப்பினால், வாய் மொழியாகவே பதில் சொல்லும் சூப்பர் ஏஐ மாடலை உருவாக்கியுள்ளார்.

இதற்கு லூனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பாடல்களைப் பாடும், கிசுகிசு பேசும், உணர்வுப்பூர்வமான கேள்விகளுக்கும் அதே உணர்வுடன் குரலில் ஏற்றத்தாழ்வுடன் பதிலளிக்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

பிக்ஸா ஏஐ என்ற புத்தாக்க நிறுவனத்தை நிறுவிய ஸ்பார்ஷ் அகர்வால், உருவாக்கியிருக்கும் லூனா என்ற செய்யறிவு, மனிதர்கள் வார்த்தைகளால் கூறி அதனை எழுத்துகளாக மாற்றி செய்யறிவிடம் கூறி பதில் பெறுவதை எளிதாக்குகிறது.

ஒரு இயந்திரத்திடம் பேசுவதைப் போல அல்லாமல், மனிதர்களிடம் பேசுவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும் என்றும் ஸ்பார்ஷ் கூறியுள்ளார்.

மேலும், அண்மையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தான் சந்தித்ததாகவும் இத்துறை தலைவர்களிடமிருந்து பாராட்டுகள் வந்ததாகவும் கூறினார்.

செய்யறிவு துறையில் இந்தியா எங்கே இருக்கிறது? அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும், அனைத்து கருத்தரங்கு அறைகளிலும் இருக்கிறது. இப்போது நாங்கள் இதற்கான பதிலை அளிக்கிறோம், இன்று உலகின் முதல் குரல் வழியில் பதில் சொல்லும் செய்யறிறை அறிமுகப்படுத்துகிறோம். பேசுவது, ஆடியோ, இசை என அனைத்தையும் இதனால் அறிய முடியும் என்று கூறினார்.

என்னிடம் போதிய பணமும் இல்லை, வசதியாக தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களும் இல்லை. கடன் பெற்று இதனை செய்திருக்கிறேன், இதன் மூலம், உலகத் தரமான தொழில்நுட்பம் இந்தியாவிலிருந்து தான் வளர்கிறது என்பதை உறுதிசெய்திருக்கிறேன் என்றார்.

இதுவரை உருவாக்கப்பட்டவை, வாடிக்கையாளர் சேவைக்காக உருவாக்கப்பட்டவை. இவை உணர்வுப்பூர்வமாக பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அகர்வால் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.