மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய்! ஐஃபோன் 17 மாடல் சாதித்ததா? சரிந்ததா?

ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் உயர்ந்துள்ளது பற்றி

News image

ஆப்பிள் ஐஃபோன்

Updated On :31 அக்டோபர் 2025, 12:09 pm IST

ஆப்பிள் நிறுவனம், ஒரே காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது, கடந்த ஜூலை - செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 102.5 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறது. செய்யறிவு வளர்ச்சி ஏற்படுத்திய சவால் மற்றும் வர்த்தகப் போரினால் ஏற்பட்ட அழுத்தங்களை எல்லாம் தாண்டி, ஐஃபோன் 17 மாடல் நல்ல விற்பனையை அடைந்திருப்பதையே இது காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், நிறுவனத்தின் வளர்ச்சி வரும் காலங்களில் மேலும் அதிகமாகவே இருக்கும் என்றும் 10 - 12 சதவிகிதம் வரை இருக்கலாம் என்றும் கணித்துள்ளார்.

பல்வேறு சவால்களையும் தாண்டி, சில ஐஃபோன்களுக்கு எதிரான எதிர்மறைக் கருத்துகளையும் தகவர்த்து, இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டை விட கூடுதலாக 10 லட்சம் ஐஃபோன்களை விற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிகப் புகழ்பெற்ற மாடல்களுக்கான செல்போன் விலைகளைக் கூட 100 டாலர் வரை உயர்த்தியும் விற்பனை செய்த நிலையில், போன் விற்பனை குறையவில்லை என்றும், சேவை வருவாயும் 28.8 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.