குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு சரிந்து முடிவடைந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :1 செப்டம்பர் 2025, 4:25 pm IST

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குக் சரிந்து முடிவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க வரிகள் மற்றும் அந்நிய முதலீடு ஆகியவை தொடர்ந்து வெளியேறி வருவதால் இந்திய ரூபாய் அதிக அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் ஆனது முந்தைய அமர்வில் 88.3075 என்ற வாழ்நாள் குறைந்த அளவை எட்டியது. ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரூபாயை ஆதரிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், இந்திய ரூபாய் ரூ.88 என்ற நிலையில் இருந்தததாகவும், இது சந்தை வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.18 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.33 ஐ தொட்டது. முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ88.19ஆக முடிவடைந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளில் எந்தவித முன்னேற்றங்கள் இல்லை என்றால், ரூபாயின் நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றும், இது மேலும் புதிய குறைந்த அளவுகளை தொடும் என்றார் கரூர் வைஸ்யா வங்கியின் கருவூலத் தலைவர் வி.ஆர்.சி ரெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.