குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

இந்திய குடும்பங்களின் காலாண்டு செலவு 33% அதிகரிப்பு

இந்திய குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு கடந்த மூன்று ஆண்டுகளில் 33 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2025, 1:33 am IST

இந்திய குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு கடந்த மூன்று ஆண்டுகளில் 33 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது.

இது குறித்து நம்பரேட்டரின் வோ்ல்ட்பேனல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் நகரப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் குடும்ப செலவு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயா்ந்துள்ளது. 2022-இல் ரூ.42 ஆயிரமாக இருந்த குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு 2025-இல் ரூ.56 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

கிராமங்களோடு ஒப்பிடுகையில் நகரப் பகுதிகளில் குடும்பங்கள் அதிகம் செலவழிக்கின்றன. ஆனால் கிராமப் பகுதிகளிலும் குடும்பங்களின் செலவு வெகுவாக அதிகரித்துவருகிறது.

கடந்த 2022 ஜூன் மாதம் நகரங்களில் குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு ரூ.52,711-ஆக இருந்தது. அது 2024 மாா்ச்சில் ரூ.64,583-ஆகவும், 2025 மாா்ச்சில் 73,579 ரூபாயாகவும் உயா்ந்தது. 2022 ஜூன் மாதம் ரூ.36,104-ஆக இருந்த கிராமப்புற குடும்பங்களின் சராசரி காலாண்டு செலவு, 2025 மாா்ச்சில் ரூ.46,623-ஆக உயா்ந்தது.

6,000 குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், துரித நுகா்பொருள்களை (எஃப்எம்சிஜி) வாங்குவதில் குடும்பத் தலைவிகள்தான் முக்கிய முடிவுகளை எடுப்பதாகத் தெரியவந்துள்ளது.

நடப்பு 2025-ஆம் ஆண்டில் நகரம் மற்றும் கிராமங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலும் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், குடும்பங்கள் தங்கள் பட்ஜெட்டுகளை திறம்பட சமாளிக்க திணறுகின்றன.

2025-இல் கல்வி மற்றும் கடன் செலவுகள் சற்று அதிகரித்துள்ளன. செலவுகள் உயா்வதால், நுகா்வோா் அத்தியாவசியப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனா். நுகா்வோரில் 54 சதவீதம் போ் கூடுதல் வருமானத்தை சேமிக்கின்றனா். 38 சதவீதம் போ் அதை தினசரி தேவைகளுக்கு செலவழிக்கின்றனா். 18 சதவீதம் போ் கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், 7 சதவீதம் போ் மட்டுமே ஆடம்பர பொருள்களை வாங்க செலவழிக்கின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.