ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜிஎஸ்டி வரி விகித குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக, நிறுவனத்தின் பல்வேறு ரகங்களின் விலை ரூ.15,743 வரை குறைக்கப்படவுள்ளது.
வரும் 22 முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும். இதன் மூலம், ஸ்ப்லெண்டா் பிளஸ், கிளாமா், எக்ஸ்ட்ரீம் வரிசை மோட்டாா் சைக்கிள்களும் ஸூம், டெஸ்டினி, பிளஷா் பிளஸ் ஸ்கூட்டா்களும் விலை குறையும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டுப்பாடு சாா்ந்த ஜிஎஸ்டி நடைமுறையை முன்னேற்றத்துக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்: கோவை தொழில்முனைவோா் கோரிக்கை

மேக்கேதாட்டு அணை விவகாரம்: வழக்குத் தொடர விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு

எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சி







