ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காளையின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிந்து 81,785.74 புள்ளிகளாகவும், நிஃப்டி 44.80 சரிந்து 25,069.20 புள்ளிகளாக நிலைபெற்று தனது வெற்றிப் பயணத்தை முடித்து கொண்டன.

News image

பங்குச் சந்தை - கோப்புப் படம்

Updated On :15 செப்டம்பர் 2025, 11:57 am

மும்பை: ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதன் காரணமாக, இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 119 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 44.80 சரிந்து 25,069.20 புள்ளிகளாக நிலைபெற்று தனது வெற்றிப் பயணத்தை முடித்து கொண்டன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 81,998.51 புள்ளிகளுடனும் பிறகு குறைந்தபட்சமாக 81,744.70 புள்ளிகளை எட்டிய நிலையில் தனது ஐந்து நாள் பேரணியை முடித்து கொண்டு சென்செக்ஸ் 0.15 சதவிகிதம் சரிந்து முடிவில் 81,785.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.

50 பங்குகள் கொண்ட நிஃப்டி 0.18 சதவிகிதம் சரிந்து 25,069.20 புள்ளிகளில் முடிவடைந்தது, அது அதன் எட்டு நாட்கள் ஏற்றத்தை நிறுத்தியது.

இன்றைய வர்த்தகத்தில் 3,165 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,711 பங்குகள் உயர்ந்தும் 1,356 பங்குகள் சரிந்தும் 98 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன. அதே வேளையில் 91 பங்குகள் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

இந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கைக் கூட்டத்தின் முடிவுக்காக சந்தைகள் காத்திருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் சற்று ஒதுங்கியே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டைட்டன், சன் பார்மா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகியவை சரிந்தும் பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

ஃபெட் கொள்கை கூட்டத்திற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், பெஞ்ச்மார்க் குறியீடுகள் பெரும்பாலும் சமமாக வர்த்தகமானது. கடந்த வார ஏற்றத்திற்குப் பிறகு ஐடி குறியீடு லாப முன்பதிவைக் கண்டது. 25-பிபிஎஸ் விகிதக் குறைப்பு பெரும்பாலும் இருக்கலாம் என்றும் பெரும்பாலும் அதன் வழிகாட்டுதலுக்காக சந்தைகள் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் உயர்ந்தும் அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தது. ஜப்பானின் பங்குச் சந்தை விடுமுறைக்காக மூடப்பட்டது.

ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் செப்டம்பர் 12 (வெள்ளிக்கிழமை) அன்று கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.48 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.31 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.129.58 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.