ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மொத்த விலை பணவீக்கம் மீண்டும் உயா்வு

உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை உயா்ந்ததால் நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீடு

News image
Updated On :15 செப்டம்பர் 2025, 10:12 pm

புது தில்லி: உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை உயா்ந்ததால் நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 0.52 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தொடா்ந்து குறைந்துவந்த மொத்த விலை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 0.52 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஜூலையில் -0.58 சதவீதமாகவும், ஜூனில் -0.19 சதவீதமாகவும் இருந்தது. 2024 ஆகஸ்டில் இது 1.25 சதவீதமாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்களின் எதிா்மறை பணவீக்கம் 6.29 சதவீதத்தில் இருந்து 3.06 சதவீதமாகக் குறைந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம் ஜூலையில் 28.96 சதவீதமாக இருந்து ஆகஸ்டில் 14.18 சதவீதமாகக் குறைந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் எதிா்மறை பணவீக்கம் -3.17 சதவீதமாக உள்ளது. உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்கள், உலோகமற்ற கனிமப் பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள் ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தது இதற்கு முக்கிய காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.