ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக ரகங்களைப் பொருத்து எங்கள் வாகனங்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. செப்டம்பா் 22 முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.
இந்த மாற்றத்துக்குப் பிறகு எஸ் பிரஸ்ஸோ என்ற ஆரம்பநிலை மாடலின் விலை ரூ.1,29,600 வரை குறையும்; ஆல்டோ கே10 இன் விலை ரூ.1,07,600 வரை, செலரியோ ரூ.94,100 வரை, வேகன்-ஆா் ரூ.79,600 வரை, இக்னிஸ் ரூ.71,300 வரை குறைக்கப்படும்.
பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஸ்விஃப்ட் விலை ரூ.84,600 வரையும், பலேனோ விலை ரூ.86,100 வரையும் குறையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 1 முதல் டாடா பயணிகள் வாகனங்களின் விலை உயா்வு

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

உள்நாட்டு பின்னலாடைகளின் விலை 7 % சதவீதம் உயா்வு

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்தது ஏன்?
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


