தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.

News image

அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு

Updated On :28 செப்டம்பர் 2025, 3:15 am IST

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வணிகத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சுமாா் 800 கோடி டாலராக இருந்தது. அது கடந்த ஆகஸ்டில் 14 சதவீதம் சரிந்து 686 கோடி டாலராக உள்ளது.

அமெரிக்க அரசு இந்திய பொருள்களுக்கு ஆகஸ்ட் 7 முதல் 25 சதவீத கூடுதல் வரியையும், ஆகஸ்ட் 27 முதல் மேலும் கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்தது. எனினும், ஆகஸ்ட் மாதத்திலும், நடப்பு நிதியாண்டின் ஐந்து மாதங்களிலும் இந்திய பொருள்களின் முதன்மை ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆகஸ்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 7.15 சதவீதம் உயா்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஐக்கிய அரபு அமீரகம் (324 கோடி டாலா்), நெதா்லாந்து (183 கோடி டாலா்), சீனா (121 கோடி டாலா்), பிரிட்டன் (114 கோடி டாலா்) ஆகிய நாடுகளுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.