மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நவராத்திரி தொடங்கிய பிறகு 75 ஆயிரத்தைக் கடந்த மாருதி விற்பனை

ஜிஎஸ்டி குறைப்புடன் தொடங்கிய நவராத்திரியில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகியின் சில்லறை விற்பனை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

News image
மாருதி கார்
Updated On :27 செப்டம்பர் 2025, 2:14 am

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி குறைப்புடன் தொடங்கிய நவராத்திரியில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகியின் சில்லறை விற்பனை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் முதுநிலை செயல் அதிகாரி (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) பார்த்தோ பானர்ஜி கூறியதாவது:

கார்களை வாங்குவதற்காக பொதுவாக நாளொன்றுக்கு 40,000 முதல் 45,000 வரை விசாரணைகள் வரும் நிலையில், ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு நாளொன்றுக்கு 80,000 விசாரணைகளும், 18,000 முன்பதிவுகளும் நடைபெறுகின்றன. நவராத்திரி தொடங்கியதிலிருந்து இதுவரை 75,000 வாகனங்களுக்கும் மேல் விற்பனையாகியுள்ளன.

சிறிய கார்கள் பிரிவில் பெரும் ஆர்வம் காணப்படுகிறது. ஆரம்பநிலை கார்கள் பிரிவில் முன்பதிவு 50 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.