கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செப்டம்பர் மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பால் இந்தியப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் பாதிக்கும். இருப்பினும், பணவீக்கம் மற்றும் விகிதக் குறைப்புகளால் உள்நாட்டு நுகர்வு வளர்ச்சியை இது ஆதரிக்கும்.
2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவிகிதமாக உயர்ந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் அது 7.4 சதவிகிதமாக இருந்தது.
இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அதே காலகட்டத்தில் 10.8 சதவிகிதத்திலிருந்து 8.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தது. அதே வேளையில் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் முந்தைய ஆண்டில் 4.6 சதவிகிதத்திலிருந்து நடப்பு நிதியாண்டில் 3.5 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.
இதையும் படிக்க: ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










