பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வாரத்தின் முதல் நாள்.. உயர்வுடன் பங்குச் சந்தை தொடக்கம்

வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை உயர்வுடன் பங்குச் சந்தைகள் தொடங்கின.

News image

பங்குச் சந்தைகள்

Updated On :29 செப்டம்பர் 2025, 10:09 am IST

மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை நிஃப்டி 50 மற்றும் மும்பை பங்குச் சந்தைக குறியீடுகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த வாரம் கடுமையான வீழ்ச்சிகளை சந்தித்து வந்த பங்குச் சந்தை குறியீடுகள் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஏறுமுகத்தில் உள்ளன.

நிஃப்டி 50 குறியீடு 24,700 என்ற அளவிலும், மும்பை பங்குச் சந்தை குறியீடு 80 புள்ளிகள் உயர்ந்தும் இன்று காலை 9.16 மணிக்கு வர்த்தகமாகின.

இன்று காலை வணிகம் தொடங்கிய போது நிப்டி 50 குறியீடு 24,691.10 என்ற நிலையில் இருந்து 36 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தைத் தொடங்கியது. மும்பைப் பங்குச் சந்தை 80,51.74 என்ற அளவில் இருந்து 84 புள்ளிகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் பங்குச் சந்தை தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து நிப்டி 24,800 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. அமெரிக்க வரி விதிப்பு முறை, எச்1 பி விசா கட்டணம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு காரணிகள் பங்குச் சந்தைகளில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த வாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த வாரம் அந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.