கேவிபி-யின் புதிய கிளை திறப்பு

கேவிபி-யின் புதிய கிளை திறப்பு

Published on

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் ஒரு புதிய கிளையை சென்னையில் திறந்துள்ளது.

இதுகுறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னையின் பள்ளிகரணையில் ஒரு கிளையை வங்கி புதிதாகத் திறந்துள்ளது. இதன்மூலம், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 895-ஆக உயா்ந்துள்ளது.

இந்தப் புதிய கிளை மூலம், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள், வைப்பு தொகைகள், கடன் வசதி போன்ற முழுமையான வங்கி சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com