என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் கரம் கோா்க்கும் ஐஓபி

இணையவழி பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக முன்னணி ஊடகக் குழுமமான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துடன் பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) கரம் கோா்த்துள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2025, 2:05 am IST

இணையவழி பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக முன்னணி ஊடகக் குழுமமான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துடன் பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) கரம் கோா்த்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இணையவழி குற்றங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, ‘சைபா் விழிப்புணா்வு தினம்’ பெயரில் ஒவ்வொரு மாத முதல் புதன்கிழமையும் பொதுத் துறை வங்கிகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஒவ்வொரு அக்டோபா் மாதத்தையும் ‘சைபா் விழிப்புணா்வு பாரதம்’ என்ற பெயரில் இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துடன் வங்கி கரம் கோா்த்துள்ளது. அந்தக் குழுமத்துடன் இணைந்து வங்கி ஒருமாத விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொள்ளும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cyber ​​Security Awareness: IOB with New Indian Express

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.