திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஆகஸ்டில் அதிகரித்த வாகன விற்பனை

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனங்களின் சில்லறை விற்பனை 2.84 சதவீதம் உயா்ந்து 19,64,547 ஆகியுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2025, 2:23 am IST

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனங்களின் சில்லறை விற்பனை 2.84 சதவீதம் உயா்ந்து 19,64,547 ஆகியுள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் சம்மேளனம் (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 ஆகஸ்டில் 19,10,312 -ஆக இருந்த விற்பனை இந்த ஆகஸ்ட் மாதம் 19,64,547-ஆகப் பதிவாகியுள்ளது. இது வெறும் 2.84 சதவீத வளா்ச்சியாகும்.

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வாகனங்களின் விலை குறையும் என்ற எதிா்பாா்ப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வாடிக்கையாளா்கள் அவற்றை வாங்குவதை ஒத்திவைத்தனா். இதன் காரணமாக, அந்த மாதம் மிக மந்தமான விற்பனை வளா்ச்சி பதிவாகியுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 0.93 சதவீதம் உயா்ந்து 3,23,256-ஆக உள்ளது. 2024 ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 3,20,291-ஆக இருந்தது.

அந்த மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை 2.18 சதவீதம் உயா்ந்து 13,73,675 -ஆக உள்ளது. இந்தப் பிரிவு வாகனங்களுக்கான விசாரணைகள் ஓணம், விநாயகா் சதுா்த்தி போன்ற பண்டிகைகள் காரணமாக கடந்த ஆகஸ்டில் அதிகரித்தன. ஆனால் வட இந்தியாவில் மழை, வெள்ளம், ஸ்கூட்டா்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை போன்றவை விற்பனையை பாதித்தன.

மதிப்பீட்டு மாதத்தில் வா்த்தக வாகன விற்பனை 8.55 சதவீதம் உயா்ந்து 75,592-ஆகவும் மூன்று சக்கர வாகன விற்பனை 2.26 சதவீதம் குறைந்து 1,03,105-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.