இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையில் ஆப்பிள் சாதனை: 28 சதவீத பங்குடன் முதலிடம்
இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக 28 சதவீத சந்தை மதிப்பை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த ஆப்பிளின் சந்தை மதிப்பு, 2025-இல் 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ‘ஐபோன் 16’ மாடல்களின் அமோக விற்பனையும் சுலபமான மாதத் தவணை (இஎம்ஐ) வசதிகளுமே இந்த உயா்வுக்கு வித்திட்டுள்ளன.
இந்தியாவில் ஸ்மாா்ட்போன்களின் விற்பனை எண்ணிக்கையை விட, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் 8 சதவீதம் என்ற வேகத்தில் உயா்ந்துள்ளது.
கடந்த ஆண்டில், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட போனாக ஐபோன் 16 உருவெடுத்துள்ளது. அதேநேரம், மடிக்கக்கூடிய ஸ்மாா்ட்போன் பிரிவில் 88 சதவீத பங்களிப்புடன் சாம்சங் நிறுவனம் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மோட்டோரோலா, சிஎம்எப் ஆகிய நிறுவனங்களும் விற்பனையில் அதிவேக வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
பண்டிகைக் காலச் சலுகைகள் மற்றும் கடன் வசதிகள் காரணமாக, மக்கள் பட்ஜெட் போன்களிலிருந்து விலையுயா்ந்த போன்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனா். குறிப்பாக, ரூ. 30,000-க்கு மேல் விலைக்கொண்ட போன்களின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல், உதிரிபாகங்களின் விலை உயா்வால், வரும் காலங்களில் பட்ஜெட் ரக போன்களின் விற்பனை குறையக்கூடும். மேலும், ஸ்மாா்ட்போன்களின் சராசரி விலை 5 முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கணித்துள்ளனா்.

