மேன்கைண்ட் பார்மா
மேன்கைண்ட் பார்மா

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

மேன்கைண்ட் பார்மா நிறுவனம் 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.414 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.
Published on

புதுதில்லி: பங்குச் சந்தையின் வலுவான செயல்பாட்டின் காரணமாக, மேன்கைண்ட் பார்மா, 3 வது காலாண்டு லாபம் 9.5% உயர்ந்து ரூ.414 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு, 3 வது காலாண்டில் நிறுவனம் ரூ.378 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டி இருந்தது.

மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.3,567 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.3,199 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் 3 வது காலாண்டில் உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,046 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இருந்த ரூ.2,742 கோடியிலிருந்து இது 11% அதிகமாகும்.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் மேன்கைண்ட் பார்மா பங்குகள் 4.3% உயர்ந்து பங்கு ஒன்றுக்கு ரூ.2,155.90ஆக வர்த்தகமானது.

Summary

Mankind Pharma posted a 9.5 per cent increase in consolidated profit after tax to Rs 414 crore for the December quarter.

மேன்கைண்ட் பார்மா
சரிகம இந்தியா லாபம் 17.8% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com