

கொல்கத்தா: இந்தியாவில் உயர்தர ப்ளைவுட், லேமினேட்டுகள், கதவுகள் மற்றும் பிவிசி தயாரிப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனமான செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் அதன் காலாண்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
2025 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10.56% அதிகரித்து ரூ. 65.05 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனம் ரூ. 58.84 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
3வது காலாண்டிற்கான மொத்த செலவுகள், கடந்த வருடம் ரூ.1,062.87 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,259.40 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 1,140.47 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 18.38% அதிகரித்து ரூ. 1,350.08 கோடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.