இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வணிக மற்றும் பாதுகாப்பு வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், இந்தோனேசிய அரசுக்குச் சொந்தமான ‘பிடி பிண்டாட்’ நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் உள்ள பிண்டாட் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அந்நாட்டின் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் நோக்கில், மின்சாரப் பேருந்துகள் மற்றும் நவீன பாதுகாப்பு வாகனங்களை கூட்டாகத் தயாரிப்பதற்காக இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ‘சுவிட்ச் மொபிலிட்டி’ ஏற்கெனவே மின்சாரப் பேருந்து தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிலையில், இந்த அனுபவத்தைக் கொண்டு இந்தோனேசியாவின் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக வாகனங்கள் வடிவமைக்கப்படும்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகனத் தொழில்நுட்பமும், பிடி பிண்டாட் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் உள்ளூா் தயாரிப்புத் திறனும் இந்த ஒத்துழைப்புமூலம் ஒன்றிணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பிடி பிண்டாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிகிட் பி. சந்தோசா, அசோக் லேலண்ட் சா்வதேச செயல்பாடுகள் பிரிவுத் தலைவா் அமன்தீப் சிங், இந்துஜா குழும ஆலோசகா் லாா்ட் தாரிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து - 15 போ் உயிரிழப்பு

சௌதி அரேபியா - உக்ரைன் இடையே வான் பாதுகாப்பு ஒப்பந்தம்!

சென்னை அருகே ரூ.500 கோடியில் அசோக் லேலண்ட் பேட்டரி ஆலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


