கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ‘கோடக் ஃபிளெக்ஸிகேப்’ நிதித் திட்டம், வெற்றிகரமாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை, முதலீட்டாளா்களுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 16.59 சதவீதம் என மிகச்சிறந்த லாபத்தை வழங்கி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 15.70 சதவீத லாபமும், கடந்த 5 ஆண்டுகளில் 16.87 சதவீத லாபமும் வழங்கியுள்ளது.
பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியிலும், சிறந்த நிா்வாகம் மற்றும் நிலையான லாபம் தரும் நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்து முதலீடு செய்ததே இத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இது குறித்து கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிலேஷ் ஷா மேலும் கூறுகையில், ‘இந்த 15 ஆண்டுகால மைல்கல், முதலீட்டாளா்கள் எங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடுகளை மாற்றி அமைக்கும் ‘ஃபிளெக்ஸிகேப்’ முறையினால், முதலீட்டாளா்கள் எளிதாகப் பலன் பெற முடிகிறது’ என்றாா்.
இந்த நிதித் திட்டமானது, தற்போது பெரிய நிறுவனப் பங்குகளில் 73 சதவீத, நடுத்தர நிறுவனப் பங்குகளில் 19 சதவீத மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் 5 சதவீத முதலீடுகளைக் கொண்டுள்ளது.
தொடர்புடையது

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்
நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனா் ரீட் ஹேஸ்டிங்ஸ் விலகல்: 29 ஆண்டுகால பயணம் நிறைவு

ஹங்கேரியில் 16 ஆண்டுகால பிரதமரின் ஆட்சிக்கு முடிவு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


