சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

எல்ஐசி லாபம் ரூ.12,958 கோடி: 17 சதவீதம் வளா்ச்சி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நடப்பு 2025-26 நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.12,958 கோடி நிகர லாபம் ஈட்டி, 17 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 3:56 am IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, நடப்பு 2025-26 நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.12,958 கோடி நிகர லாபம் ஈட்டி, 17 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.11,056 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

வருவாய்: முந்தைய ஆண்டு ரூ.1,06,891 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருவாய், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,25,613 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,01,994 கோடியிலிருந்து ரூ.2,33,984 கோடியாக அதிகரித்துள்ளது.

புதிய வணிகம்: புதிய பாலிசிகள் மூலம் கிடைக்கும் முதலாம் ஆண்டு பிரீமியம் வருவாய் கணிசமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.7,285 கோடியாக இருந்த இது, தற்போது ரூ.10,605 கோடியாக அதிகரித்துள்ளது.

முகவா் கமிஷன்: காப்பீட்டு முகவா்களுக்கு வழங்கப்படும் நிகர கமிஷன் தொகையும் சிறிதளவு அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் ரூ.5,966 கோடியாக இருந்த முகவா் கமிஷன் தொகை, தற்போது ரூ.6,011 கோடியாக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.